ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்றநகரில்1889 ஆம்ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர்ஓவியராக முயன்று தோல்விகண்டார். இந்தஇளமைப்பருவத்தில் தான்எப்போதோ இவர்ஒருதீவிரஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல்உலகப்போரின்போது இவர்ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச்செயலுக்கான விருதுகளைப் பெற்றார்.
முதல் உலகப்போரில்ஜெர்மனி தோற்றது கண்டுஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது30 ஆம்வயதில், முனீக்கில் ஒருகுட்டிவலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனதுபெயரைவிரைவிலேயே "தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி" (National Socialist German Worker"s Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக "நாஜிக் கட்சி" என்றுஅழைத்தனர். இரண்டுஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர்(Fuehrer) ஆனார்.
ஹிட்லரின் தலைமையில் நாஜிக்கட்சிமிகவிரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டுநவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக்கவிழ்க்க முயன்றது. இந்தமுயற்சியை "முநீனக் பீர்மண்டபப் புரட்சி" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைதுசெய்யப்பட்டு, அரசுத்துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத்தண்டனைஅனுபவித்த பிறகுஹிட்லர் விடுதலையானார்.
1928 ஆம்ஆண்டில் நாஜிக்கட்சிஇன்னும் ஒருசிறியகட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும்பொருளாதார மந்தம்(Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள்வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதேசமயம்நாஜிக்கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டுஜனவரிமாதத்தில், ஹிட்லர் தமது44 வதுவயதில்ஜெர்மனியில் தலைமைஅமைச்சர் (Chancellor) ஆனார்.
ஹிட்லர் தலைமைஅமைச்சரான பிறகு, அரசுஎந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒருசர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்தசர்வாதிகார ஆட்சிநிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத்துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப்படவேஇல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லதுபடுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப்போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவுவழிவகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்.
ஹிட்லர் இதன்பின்புஇரண்டாம் உலகப்போருக்குக் காரணமாக இருந்தபடையெடுப்புகளில் இறங்கினார். சிலநிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவையாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறிஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள்ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதைவலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர்வல்லந்தமாகத் தன்வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக்கண்டுகொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்டபோதுகூட(1938 செப்டம்பர்) இந்தநாடுகள் அந்தஇணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம்செய்துகொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் "முனீக் ஒப்பந்தம்" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்தஉடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்தஉடன்படிக்கை கையெழுத்தான சிலமாதங்களுக்குப் பிறகுசெக்கோஸ்லாவாக்கியாவின் மற்றபகுதிமுழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத்தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாகமிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன.
எனினும் போலந்து நாடுஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதிபூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச்சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர்"ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்துகொண்டார். (உண்மையில் இதுஓர்ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்தஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்ளஇருசசர்வாதிகாரிகளும் இரகசியஉடன்பாடு செய்துகொண்டனர்) இந்தஒப்பந்தத்தின் மூலம்ஹிட்லர் முதலில் தமக்குதற்காப்புத் தேடிக்கொண்டார். இந்தஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பதுநாட்களுக்குப் பிறகுபோலந்தை ஹிட்லர் தாக்கினார்.
அதற்கு 16 நாட்களுக்குப் பின்புசோவியத் ரஷியாவும் போலந்து மீதுபடையெடுத்தது- ஜெர்மனி மீதுஇங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப்பிரகடனம் செய்தபோதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.
ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம்ஆண்டில் ஆகும். அந்தஆண்டுஏப்ரல்மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மேமாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகியநாடுகள் அதன்வசமாயின. ஜூன்மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம்செய்துகொண்டுசரணடைந்தது- அதேஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீதுஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. "பிரிட்டன் சண்டை" (Battle of Britain) எனப்பெயர்பெற்றஇந்தப்போரைப்பிரிட்டன் அஞ்சாநெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன்பின்இங்கிலாந்து மீதுஒருபெரும்படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று.
1941 ஆம்ஆண்டுஏப்ரல்மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள்வெற்றிகொண்டன. ரஷியாவுடன் செய்துகொண்ட"ஆக்கிரமிப்பு தவிர்ப்பு " ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டுரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப்படைகளைமுற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியாஆகியஇருநாடுகளுடன் ஒரேசமயத்தில் போர்புரிந்து கொண்டே1941 ஆம்ஆண்டுடிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான "முத்துத் துறைமுகம்" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தைஜப்பானியர் தாக்கிய சிலநாட்களுக்குப் பிறகுஅமெரிக்க மீதுபோர்ப்பிரகடனம் செய்தார்.
1942 ஆம்ஆண்டுமத்தியில், உலகவரலாற்றில் எந்தஒருநாடும், எந்தஒருசமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப்பெருமளவு ஐரோப்பியப் பகுதிஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ்இருந்தது. இதுதவிரவடஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அதுஆட்சிசெலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்தஎல்அலமைன்போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப்போரில்ஒருதிருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகுஜெர்மன் இராணுவத்தின் வெற்றிவாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்விஉறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராகஇல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகுஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும்ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டுவசந்தகாலத்தில் கசப்பான முடிவுஏற்பட்டது. ஏப்ரல்30 ஆம்தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். அதற்குஏழுநாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது.
ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறுகண்டிராத கொடியஇனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர்கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்துகொண்டார். உலகிலுள்ள யூதர்ஒவ்வொருவரையும் கொல்வதே தமதுகுறிக்கோள் என்றுபகிரங்கமாக அறிவித்தார். அவரதுஆட்சியின்போது, பெரியநச்சுவாயு அறைகளைக் கொண்டஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூடஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்தநச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டுஉந்துகளில் அனுப்பி வைத்தனர். சிலஆண்டுகளிலேயே இந்தமுறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஹிட்லர் பலிவாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரதுஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிரதாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோகருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப்படுகொலைகள் வெறும்ஆத்திரஉணர்ச்சியாலோ, போரில்ஏற்பட்ட மனக்குமுறலினாலோ செய்யப்பட்டவை எனஎண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரியவாணிகநிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலைசெய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனைபேர்கொல்லப்பட வேண்டும் என்றுஇலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமணமோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்புதயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப்படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒருசான்றுகூறலாம். போரின்இறுதிநாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன்பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரணமுகாம்களுக்கு ஆட்களைமாட்டுஉந்துகளில் கொண்டுசெல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றுஹிட்லர் ஆணையிட்டிருந்தார்.
பல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ்நீடிக்கும் எனத்தோன்றுகிறது. முதலாவதாக, உலகவரலாற்றிலே மிகக்கொடியமனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப்பேரரசன் நீரோ, ரலிகுலா போன்றகொடியவர்களின் கொடுமைமிகஅற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவுகூறப்படுகிறார்கள். அப்படியானால், உலகவரலாற்றில் மகாக்கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும்பலப்பலநூற்றாண்டுகள்வரை பெயர்பெற்றிருப்பார் என்றுஊகிக்கலாம். உலகின்மிகப்பெரியபோராகிய இரண்டாம் உலகப்போர்மூள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்றமுறையிலும் ஹிட்லரின் பெயர்நிலைபெற்றிருக்கும். இன்றுஅணுஆயுதங்கள் தயாரிக்கப் பட்டுவருவதால் எதிர்காலத்தில் இரண்டாம் உலகப்போரைப்போன்றபேரளவுப் போர்கள் மூள்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே, இப்போதிருந்து ஈராயிரம் அல்லதுமூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னருங்கூட உலகவரலாற்றில் மிகப்பெரியநிகழ்ச்சியாக இரண்டாம் உலகப்போர்தான் கருதப்படும்.
ஹிட்லரின் வரலாறுமுழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. இந்தக்காரணத்தினாலும், ஹிட்லரின் புகழ்நீடிக்கும். ஹிட்லர் ஓர்அயல்நாட்டினர் (அவர்பிறந்தது ஆஸ்திரியாவில், ஜெர்மனியில் அன்று). அவருக்கு அரசியல் அனுபவமோ, பணபலமோ, அரசியல் தொடர்புகளோ இருக்கவில்லை. அப்படியிருந்தும், பதினான்கே ஆண்டுகளுக்குள் அவர்ஒருபெரியஉலகவல்லரசின் தலைவராக ஆனார்என்றால் அதுஉண்மையிலேயே வியப்பளிக்கிறது. ஹிட்லர் வியக்கத் தக்கநாவன்மை பெற்றிருந்தார். உலகவரலாற்றிலே மிகச்சிறந்தநாவன்மை வாய்ந்தவராக ஹிட்லரைக் கருதலாம். அந்தநாவன்மையின் துணையால்தான் அவர்தம்வழியில் மக்களைச் செயல்படத் தூண்டினார். இறுதியாக அதிகாரத்தைப் பிடித்ததுமூ அந்தகதிகாரத்தை அவர்கொடூரமான வழிகளுக்குப் பயன்படுத்தினார். இதனைஅத்துணை விரைவில் மறந்துவிட முடியாது.
உலக வரலாற்றில் ஹிட்லரைப் போல்தமதுசொந்தத் தலைமுறையினர் மீதுபெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறுஎவரும்இல்லை. அவரதுதூண்டுதலினால் ஏற்பட்ட உலகப்போரிலும் நாஜிமரணமுகாம்களிலும் கோடிக்கணக்கான மக்கள்பலியானது ஒருபுறமிருக்க, போரின்விளைவாக பலகோடிமக்கள்வீடிழந்தார்கள் அல்லதுஅவர்களது வாழ்க்கை சீர்குலைந்து போயிற்று.
ஹிட்லரின் செல்வாக்கு பற்றியஎந்தஒருமதிப்பீடும் வேறுஇருஅம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாவதாக, ஹிட்லருடைய தலைமையின் கீழ்நடந்தநிகழ்ச்சிகள் அனைத்தும் அவர்தோன்றியிராதிருந்தால், நிகழ்ந்திருக்கவே செய்யாது. (இந்தவகையில், சார்லஸ் டார்வின், சைமன்பொலீவார் ஆகியோரிடமிருந்து அவர்முற்றிலும் வேறுபடுகிறார்) ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் நிலவியநிலைமைஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது என்பதுஉண்மைதான். எடுத்துக்காட்டாக, அவரதுஇராணுவவெறியூட்டும் முழுக்கங்களும், யூதர்எதிர்ப்பு உரைகளும் கேட்போரைப் பிணித்தன. எனினும், ஹிட்லர் செயற்படுத்திய தீவிரமான கொள்கைகளைத் தங்கள்அரசுபின்பற்றியிருக்க வேண்டுமென 1920களிலோ, 1930களிலோபெரும்பாலான ஜெர்மானியர்கள் விரும்பினார்கள் என்றுகருதுவதற்கு ஆதாரம்ஏதுமில்லை. ஹிட்லர் செய்ததை மற்றஜெர்மன் தலைவர்களும் செய்திருப்பார்கள் என்றுகருதுவதற்கும் இடமில்லை. ஹிட்லர் காலத்து நிகழ்ச்சிகளை, புறநோக்கர்கள் எவரும்ஏறத்தாழக்கூட ஊகித்துக் கூறியதில்லை.
இரண்டாவதாக நாசிஇயக்கம் முழுவதிலுமே தனியொரு மனிதரேஆதிக்கம் செலுத்தினார். பொதுவுடைமையின் எழுச்சியில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரும் வேறுபலதலைவர்களும் பெரும்பங்குகொண்டார்கள். ஆனால், ஹிட்லருக்கு முன்பும், அவருக்குப் பின்பும் நாஜிசமதருமத்தற்குத் தனிச்சிறப்பு வாய்ந்த தலைவர்எவரும்கிடைக்கவில்லை. ஹிட்லர்தான் நாஜிகளை அதிகாரபீடத்தில் ஏற்றிவைத்தார். நாஜிகள் ஆட்சியில் நீடித்த காலம்முழுவதிலும் தலைமைப் பதவியைத் தாமேவைத்துக் கொண்டிருந்தார். ஹிட்லர் இறந்ததும், அவருடைய நாஜிக்கட்சியும் அதுதலைமைஏற்றிருந்த அரசும்மாண்டுமடிந்தன.
ஆனால், ஹிட்லருடைய செல்வாக்கு அவரதுதலைமுறையின் மீதுமிகப்பெருமளவில் விளைவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், எதிர்காலத்தின் போதுஅவரதுசெயல்களின் விளைவுகள் மிகக்குறைவாகவே இருக்கும் எனத்தோன்றுகிறது. ஹிட்லர் தமதுகுறிக்கோள்களில் ஒன்றைக் கூடஅடையாமல் படுதோல்வியடைந்தார். பிந்திய தலைமுறையினர் மீதுஅவரதுசெயல்களின் விளைவுஏதேனும் இருக்குமானால், அதுஅவர்கருதியதற்கு நேர்மாறானதாகவே இருக்கும் எனலாம். ஜெர்மனியின் ஆதிக்கத்தையும் நிலப்பரப்பையும் விரிவுப்படுத்த ஹிட்லர் விரும்பினார். அவர்பெருமளவு நிலப்பகுதிகளை வெற்றிகண்டபோதிலும், அந்தவெற்றிகள் அனைத்தையும் அற்பஆயுளில் முடிந்தன. இன்றுகிழக்கு ஜெர்மனியும், மேற்குஜெர்மனியும் ஒருங்கிணைந்தால் கூட, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபோது ஜெர்மன் குடியரசில் அடங்கியிருந்த நிலப்பரப்பைவிடக் குறைவான நிலப்பகுதியே அடங்கியிருக்கும். உலகிலிருந்து யூதர்களை அடியோடு அழித்து விடவேண்டும் என்றுஹிட்லர் வெறிகொண்டு அலைந்தார். ஆயினும் அவர்பதவிஏற்றபின்பு15 ஆண்டுகளிலேயே 2,000 ஆண்டுகளில் இல்லாதவகையில், முதன்முதலாகச் சுதந்திரமான யூதநாடுஅமைந்தது. பொதுவுடைமையையும், ரஷியாவையும் ஹிட்லர் கடுமையாக வெறுத்தார். எனினும், அவர்இறந்தபோது ஓரளவுக்கு அவர்தொடங்கிய உலகப்போரின்விளைவாக, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி மீதுரஷியர்கள் தங்கள்கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தினார்கள். உலகெங்கும் பொதுவுடமையின் செல்வாக்கு பெருமளவுக்குப் பெருகிறது. ஹிட்லர் மக்களாட்சியை இழிவாகக் கருதினார். ஜெர்மனியில் மட்டுமின்றி, மற்றநாடுகளிலும் மக்களாட்சியை அடியோடு ஒழித்துவிட எண்ணினார். ஆனால், இன்றுமேற்குஜெர்மனியில் மக்களாட்சி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. ஹிட்லர் காலத்துத் தலைமுறையைச் சார்ந்த ஜெர்மானியர்களைவிட இன்றையஜெர்மானியர்கள் சர்வாதிகார ஆட்சியைக் கடுமையாக வெறுக்கிறார்கள்.
ஹிட்லர் தாம்வாழ்ந்த காலத்தில் அளவற்றசெல்வாக்கினைச் செலுத்தியதாலும், வருங்காலத் தலைமுறையின் மீதுஅவருக்கு எவ்விதசெல்வாக்கும் இல்லாமற் போனதாலும் ஏற்பட்ட விசித்திரமான கூட்டிணைவின் காரணமாக விளைந்ததென்ன? ஹிட்லர் தம்காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டிருந்தார். அதற்காக, இந்தப்பட்டியலில் அவருக்கு உயர்ந்த இடம்அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஷி-ஹூவாங்-தை, அகஸ்டஸ் சீசர், ஜெங்கிஸ்கான் போன்றோரின் செல்வாக்கு அவர்களுக்குப் பின்பலநூற்றாண்டுகள் நீடித்தமையால், ஹிட்லருக்கு நிச்சயமாக அவர்களுக்கு பின்னரே இடமளிக்க வேண்டும். ஹிட்லருக்கு நெருக்கமானவர்களாக நெப்போலியனையும், மகாஅலெக்சாந்தரையும் கூறலாம். ஒருகுறுகிய காலத்தில் இவ்விருவரையும் விடமிகப்பெருமளவில் ஹிட்லர் உலகஅமைதியைச் சீர்குலைத்தார். அந்தஇருவரின் செல்வாக்கு நீண்டகாலம் நீடித்ததன் காரணமாக, அவர்களுக்குச் சற்றுப் பின்னால் ஹிட்லருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.

No comments:
Post a Comment