Saturday, 29 March 2014

இலக்கண குறிப்பறிதல் - உவமைத் தொகை


உவமைத் தொகை:

மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று.

அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம்.

இதில் "போன்ற" என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று.

மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம்.

உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற "போல", "போன்ற", "அன்ன" என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும்.

மேலும் உதாரணச் சொற்கள்:

தேன்மொழி - தேனைப் போன்ற மொழி உடையவள்...
மதிமுகம் - மதி போன்ற முகத்தைக் கொண்டவள்.
கனிவாய் - கனி போன்ற வாயை உடையவள்.

இதுபோன்ற வார்த்தைகள் உவமைத் தொகையைக் குறிக்கும்.

Saturday, 22 March 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 - VAO தேர்வு அறிவிப்பு..! ஆன்லைனில் அப்ளை செய்ய கடைசி தேதி ஏப்ரல் 15..


 தமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை http://tnpscexams.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை http://tnpscexams.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்க்கு ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

வி.ஏ.ஓ. என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இந்த பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ல் தேர்வு கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு தகுதி உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஜூன் 14-ம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது.

 இந்த தேர்வில், பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள், வி.ஏ.ஓ. நடைமுறைகள் தொடர்பாக 25 கேள்விகள், திறனாய்வு பற்றிய 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 80 வினாக்கள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். நேர்முகத்தேர்வு கிடையாது எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வு ஏதும் கிடையாது.

தேர்வில் வெற்றிபெற்றாலே வி.ஏ.ஓ. வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விவரங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 15 கடைசி நாள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் (நள்ளிரவு 11.59 மணி வரை) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ஏப்ரல் 17-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார். 

வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.


Friday, 21 March 2014

இலக்கணக் குறிப்பறிதல் - பண்புத்தொகை


TNPSC தேர்வுகளில் தமிழ் இலகணம் பாடப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இலக்கணக் குறிப்பறிதல் பகுதியிலிருந்து ஒன்றுக்கு மேற்ப்பட்ட கேள்விகள் கேட்க வாய்ப்பிருக்கிறது. இப்பதிவில் இலகணம் என்றால் என்ன? இலக்கண குறிப்பின் வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு சரியான இலக்கணக் குறிப்பை அறிந்து விடை தர வேண்டும். ஒரு சில வார்த்தைகளுக்கு இரு விடைகளும் பொருத்தமானவை போல் தோன்றும். நன்கு சிந்தித்து கேள்வியைப் புரிந்துகொண்டால் அவற்றில் ஒன்றே சரியான விடையாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளில் இலக்கணக் குறிப்புகளை நன்றாக பயன்றிருந்தாலே இதை எழுதிவிடலாம். எனினும் இலக்கண விதிகளை சரியாக புரிந்துகொள்ளாத பருவம் அது.. எனவே மீண்டும் இலக்கணத்தை படியுங்கள். இலக்கண விதிகளைப் படித்துப் பார்த்தால் தற்போது இலக்கணக் குறிப்பு அளிப்பது என்பது எளிதாகவே இருக்கும்.

பண்புத்தொகை:

சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் "மை" விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும்.

"தொன்னிறம்" இச்சொல்லைப் பிரிக்கும்போது "தொன்மை+நிறம்" எனப் பிரியும். இதில் நிலைமொழியில் "மை" விகுதி சேர்ந்து வந்திருப்பதால் இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும்.

உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
இன்னுயிர் - இனிமை + உயர் ==> பண்புத்தொகை
பைங்கூழ் - பசுமை + கூழ் ==> பண்புத்தொகை
செவ்வேள் - செம்மை + வேள் ==>பண்புத்தொகை

இவ்வாறு பண்புத் தொகையை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும் பண்புத் தொகைக்குரிய சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

1. செந்தமிழ் - செம்மை + தமிழ் ==>பண்புத்தொகை
2. நெடுந்தேர் - நெடுமை + தேர் ==> பண்புத்தொகை
3. மெல்லடி
4. கருவிழி
5. செங்கை
6. சீறடி
7. வெந்தழல்
8. பொற்காலம்
9. நற்செயல்
10. நவகவிதை
11. குறுநடை
12. நற்றூண்
13. பெருமகள்
14. பெரும்பெயர்
15. நெடும்படை
16. நெடுந்திரை
17. பேரானந்தம்
18. பேரொளி
19. நல்லருள்
20. நல்லுயிர்
21. மொய்புலி
22. வெங்கரி
23. தண்தார்
24. நற்றூண் 

Thursday, 20 March 2014

நூல்களும் நூலாசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:

பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு - நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்


பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் - 11


நாலடியார் - சமண முனிவர்கள்
நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை - முள்ளியார்
பழமொழி - முன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
ஏலாதி - கணிமேதாவியர்
திருக்குறள் - திருவள்ளுவர்

அகநூல்கள் 6

ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
முதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்

புறநூல்

களவழி நாற்பது - பொய்கையார்

திருக்குறள்:

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
நாயன்மார்கள் 63
திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
பெரியபுராணம் - சேக்கிழார்
அப்பர் - தேவாரம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
திருமூலர் - திருமந்திரம்
ஐம்பெரும்காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
குண்டலகேசி - நாதகுத்தனார்
வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஐஞ்சிறுகாப்பியங்கள்:

சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நீலகேசி - தோலாமொழித் தேவர்
உதயண குமார காவியம் - உரை
நாக குமாரகாவியம் - உரை
யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர்

அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புற்பொருள் - ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் - அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்

***

நூல்கள் - ஆசிரியர்
கம்பராமாயணம் - கம்பர்
கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
பெரியபுராணம் - சேக்கிழார்
திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
நளவெண்பா - புகழேந்தி புலவர்
வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
சீறாப்புராணம் - உமறுப்புலவர்
திருப்பாவை - ஆண்டாள்
திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
திருவாசகம் - மாணிக்கவாசகர்
மூவருலா - ஒட்டக்கூத்தர்
தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
தேம்பாவணி - வீரமாமுனிவர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
திருப்புகழ் - அருணகிரி நாதர்

****

கவிஞர்கள் - நூல்கள்

இராமலிங்க அடிகள் - திருவருட்பா
குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.

ஒரு சொல் தரும் இருபொருள்

ஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் "பார்" என்ற சொல் "காண்" பார்த்தல் என்ற பொருளில் வரும். அதேபோல "உலகம்" என்ற பொருளிலும் வரும். ஆக "பார்" என்ற சொல் பார்த்தல் அல்லது உலகம் என்ற இரு வேறு பொருளைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். இடமறிந்து இவற்றின் பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்
பார்: உலகம், காண்
இசை: புகழ், பாட்டு, இனிய ஒலி
நாண்: வெட்கப்படு, கயிறு
மெய்: உடல், மெய்யெழுத்து
திரை: அலை, திரைச்சீலை
மறை: வேதம், மறைத்து வை
பிடி: பெண்யானை, பிடித்துக்கொள்
படி: பாடம் படி, படிக்கட்டு
திங்கள்: சந்திரன், மாதம்
வலி: வலிமை, நோவு


இதுபோன்ற சில சொற்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களைக் கொடுக்க வல்லன. இவ்வகைச் சொற்களை அறிந்துவைத்துக்கொள்வது டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் கேள்வித்தாள் பகுதிகளை எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழை முழுமையாகப் படித்து தேர்வை எதிர்கொள்ளும்போது தேர்வில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். நன்றி நண்பர்களே..!

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன?

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.

ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
 சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
 பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
 சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
 சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சி, உணவு, ஊன், தசை
 வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
 அம்பு, உயர்ச்சிமிகுதி
 அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமி, ஆனந்தம்
 வியங்கோள்  விகுதி
கா
 காத்தல், சோலை
கி
 இரைச்சல் ஒலி
கு
 குவளயம்
கூ
 பூமி, கூவுதல், உலகம்
கை
 உறுப்பு, கரம்
கோ
 அரசன், தந்தை, இறைவன்
கௌ
 கொள்ளு, தீங்கு
சா
 இறத்தல், சாக்காடு
சீ
 லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு
 விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே
 காலை
சை
 அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ
 மதில், அரண்
ஞா
  பொருத்து, கட்டு
தா
 கொடு, கேட்பது
தீ
 நெருப்பு , தீமை
து
 உண்
தூ
 வெண்மை, தூய்மை
தே
 கடவுள்
தை
 தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா
 நான், நாக்கு
நி
 இன்பம், அதிகம், விருப்பம்
நீ
 முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ
 யானை, ஆபரணம், அணி
நே
 அன்பு, அருள், நேயம்
நை
 வருந்து
நோ
 துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ
 மரக்கலம்
 நூறு
பா
 பாட்டு, கவிதை
பூ
 மலர்
பே
 நுரை, அழகு, அச்சம்
பை
 கைப்பை
போ
 செல், ஏவல்
 சந்திரன், எமன்
மா
 பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ
 மேலே , உயர்ச்சி, உச்சி
மூ
 மூப்பு, முதுமை
மே
 மேல்
மை
 கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ
 மோதல், முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா
 ஒரு வகை மரம், யாவை, இல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா
 வருக, ஏவல்
வி
 அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ
 மலர் , அழிவு
வே
 வேம்பு, உளவு
வை
 வைக்கவும், கூர்மை
வௌ
 வவ்வுதல்
நோ
 வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு
 நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று
 எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்