Monday, 24 February 2014

அசோகர் (கி.மு. 300-கி.மு.232) | history of ashoka in tamil

இந்திய வரலாற்றில் மிகப்பெரும்புகழ்வாய்ந்த அரசராகவிளங்கியவர் அசோகர். இவர்மௌரியமன்னர்மரபில்மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசைநிறுவிய சந்திரகுப்த மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்தியஇராணுவத் தலைவராக விளங்கினார். அவாமகாஅலெக்சாந்தரின் இந்தியப் படைஎடுப்பிற்குப் பிறகு, வடஇநதியாவின் பெரும்பகுதியை வென்றுஅதன்மூலம்இந்தியவரலாற்றிலேயே ஒருபெரும்பேரரசைமுதன்முதலில் நிறுவினார்.
அசோகர் பிறந்தஆண்டுதெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர்பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர்அரியணைஏறினார். முதலில் தன்பாட்டனாரின் அடியொற்றி தம்ஆட்சிஎல்லைகளை இராணுவநடவடிக்கை மூலம்விரிவுபடுத்த விழைந்தார். அவரதுஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கலிங்கநாட்டின் (இன்றையஒரிசாமாநிலம்) மீதுபோர்தொடுத்து வெற்றிகண்டார். ஆனால்தமதுவெற்றியின் பின்னணியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில்ஒருஇலட்சம் பேர்இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால், அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்டஅசோகர்இந்தியா முழுவதையும் வெற்றிகொள்ளவேண்டும் என்றதம்எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லாவகைஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவேஒழித்துவிட உறுதிபூண்டார். அவர்புத்தசமயத்தைத் தமதுசமயக்கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகியஅறநெறிகளைத் தம்வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.
அசோகர் தம்சொந்தவாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால்உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர்செயற்படுத்தியது மிகமுக்கியமானதாகும். அவர்மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீபடுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசுஅலுவலர்களை நியமித்தார். அவரதுஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால்அசோகர்குறிப்பாகப் புத்தசமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால்புத்தசமயம்மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்தசமயப்பிரச்சாரகர்களைப் பலஅயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கைசென்றகுழுபெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.
அசோகர் தமதுநீண்டஆட்சிக் காலத்தின்போது, தமதுவாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், தூபிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்தநினைவுச் சின்னங்களில் பலஇன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச்சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவைஅசோகப்பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவைஅறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரதுகொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச்சான்றுகளாகும். இந்தத்தூபிகள் அவர்காலத்திய சிறந்தகலைவேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.
அசோகரின் இறப்பிற்குப் பிறகு50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசுசிதறுற்றது. அதன்பின்புஅதுஎழுச்சி பெறவேஇல்லை. ஆனாலும், அசோகர்புத்தசமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம்உலகத்தின் மீதுஅவர்பெற்றநீண்டகாலச்செல்வாக்கு மிகப்பெரியதாகும். அவர்ஆட்சிபீடம்ஏறியபோது புத்தச் சமய்ம்வடஇந்தியாவில் ஒருகுறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவாஇறக்கும்போது இந்தியா முழுவதும் அதுபரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டைநாடுகளிலும் மிகவிரைவாகப் பரவிவந்தது. கௌதமபுத்தர் நீங்கலாக புத்தசமயம்ஓர்உலகப்பெரும்சமயமாகவளர்வதற்கு வேறெவரையும் விடமுக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.